தமிழ் கட்சிகள் இணைந்து யாழில் உண்ணாவிரதம்

தமிழ் கட்சிகள் இணைந்து யாழில் உண்ணாவிரதம்

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக இன்று (12.09.2026) காலை சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. 

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.